Published : 09 Mar 2020 12:54 PM
Last Updated : 09 Mar 2020 12:54 PM

தேர்வு அழுத்தங்களை எதிர்கொள்ள உளவியல் மையம்: தெலங்கானாவில் அறிமுகம்

இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ தெலங்கானா அரசு, உதவி எண்களை அறிவித்து உளவியல் மையங்களை அமைத்துள்ளது.

தெலங்கானா இன்டர்மீடியட் தேர்வுகள் அண்மையில் தொடங்கியுள்ளன. முதலாமாண்டு மாணவர்களுக்கு மார்ச் 4-ம் தேதியும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 5-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கின. முதலாமாண்டு மாணவர்களுக்கு மார்ச் 21-ம் தேதி வரையும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு மார்ச் 23-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வு வாரியத்தைப் போலவே தெலங்கானா தேர்வு வாரியமும் மாணவர்கள் தேர்வு தொடர்பான அழுத்தங்கள், பயம், பதற்றத்தில் இருந்து விடுபடுவதற்கு உதவி புரிவதற்காக உளவியல் மருத்துவர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளது.

இந்த உதவி மையத்தில் ஒரு மூத்த உளவியல் மருத்துவரும் 5 மருத்துவ உளவியலாளர்களும் இருப்பர். மார்ச் 5-ம் தேதி முதல் தினந்தோறும் மாலை 3 மணி வரை இந்த மையம் இயங்கி வருகிறது.

உளவியல் உதவி மையத்தோடு தேர்வு மையங்களைக் கண்டுபிடிக்கவும் தனிச்செயலி தெலங்கானாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மாணவர்கள் தேர்வுக்கு முன்னதாக பரிசோதித்துக் கொள்ள வேண்டிய சரிபார்ப்புப் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தேவைப்படும் தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

குஜராத் மாநிலத்திலும் இதேபோல உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x