Published : 04 Mar 2020 04:01 PM
Last Updated : 04 Mar 2020 04:01 PM

கேந்திரிய வித்யாலயா மாணவர் சேர்க்கையில் மாற்றம்: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக 1-ம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. இதற்கான சேர்க்கை மட்டும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. அதேபோல 2-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலான (11-ம் வகுப்பு தவிர்த்து) வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கியது. இந்த வகுப்புகளுக்கு நேரடியாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. 10-ம் வகுப்புத் தேர்வுகள் முடிந்த 10 நாட்களுக்குள் 11-ம் வகுப்புக்கான விண்ணப்ப அறிவிப்பு வெளியாகும்.

இந்நிலையில் 2020- 21 ஆம் கல்வி ஆண்டின் 1-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதுதொடர்பாக பல்லாயிரக்கணக்கான கேள்விகள் கேந்திய வித்யாலயா நிர்வாகத்திடம் குவிந்தன. இதைத்தொடர்ந்து கே.வி. ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ''மாணவர் சேர்க்கையில், சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. அவை முடிந்தபிறகே மாணவர் சேர்க்கை தொடங்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.வி.யில் மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவுப் பணிகள் முடிந்த பிறகு, கேந்திரிய வித்யாலயா சங்கதன் இணையதளத்தில் முதல் சேர்க்கைப் பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து இடங்கள் காலியாக இருந்தால், இரண்டாவது மற்றும் மூன்றாவது மாணவர் சேர்க்கைப் பட்டியல் வெளியாகும்.

பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரையில், கேந்திரிய வித்யாலயாவில் இடம் கிடைப்பது சவாலான ஒன்றாகும். கடந்த 2019-ம் ஆண்டில், கே.வி. பள்ளிகளில் இருந்த 1 லட்சம் இடங்களுக்கு, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x