Published : 29 Feb 2020 05:52 PM
Last Updated : 29 Feb 2020 05:52 PM

ஒரு டிகிரியுடன் கல்வி முடிவதில்லை: குடியரசுத் தலைவர்

ஒரு டிகிரியுடன் கல்வி முடிந்துவிடுவதில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்தில் நடைபெற்ற தொண்டு நிறுவன விழாவில் குடியரசுத் தலைவர் கலந்துகொண்டார். அங்கே அவர் பேசியதாவது:

''நாம் மதிப்புசார் கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும். அதன் நோக்கம் நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதே. நல்ல மனிதனால்தான் நல்ல மருத்துவராக இருக்க முடியும், நல்ல தலைவராக, நல்ல தந்தையாக, நல்ல கணவனாக இருக்க முடியும்.

ஒரு டிகிரியுடன் ஒருவரது படிப்பு முடிந்துவிடுவதில்லை. ஞானத்தின் வழியாகவே அறிவு, திறமைகளைப் பெற முடியும்.

மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கல்வித் துறையில் ஏராளமான முன்னெடுப்புகளை எடுத்துள்ளன. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கல்வி அளியுங்கள். நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுங்கள்.

மதிப்புசார் கல்வியே, ஒருவரின் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவுகிறது'' என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x