Published : 29 Feb 2020 12:15 PM
Last Updated : 29 Feb 2020 12:15 PM
பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அரசே ஊதியம் வழங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளி நூற்றாண்டு விழா
திருப்பூரில் உள்ள வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா கட்டிடத் திறப்பு விழா, தொடுதிரை வகுப்பறைத் திறப்பு விழா, பள்ளி நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ரூ.99.43 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது. அறிவுத் திருக்கோயில் என்ற தனியார் அமைப்பு, ரோட்டரி க்ளப் சார்பில் இவை மேற்கொள்ளப்பட்டன.
விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் விஜய கார்த்திகேயன், முதன்மைக் கல்வி அலுவலர்கள், பெற்றோர் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ''பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அரசே ஊதியம் வழங்கும். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் ரூம், ஸ்மார்ட் போர்டுகள் அமைத்துத் தரப்படும். அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் மாதத்துக்குள் காலணிகள் வழங்கப்படும்.
பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT