Published : 29 Feb 2020 10:45 AM
Last Updated : 29 Feb 2020 10:45 AM
கல்லூரிக் கல்வி சென்னை மண்டல இணை இயக்குநர் அலு வலகத்தில் அலுவலக உதவி யாளர் பணியில் 2 இடங்கள் (எஸ்சி-அருந்ததியர் (ஆதரவற்ற விதவை) மற்றும் எம்பிசி வகுப்பு) காலியாக உள்ளன. இப்பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அருந்ததியர் பிரிவுக்கு வயது 18 முதல் 35 வரையிலும், எம்பிசி பிரிவுக்கு 18 முதல் 32 வரையிலும் இருக்க வேண்டும்.
கல்விச் சான்றிதழ், வயது சான்றிதழ், சாதி சான்றிதழ் நகல்களுடன் வெள்ளைத்தாளில் தன் விவரங்களை குறிப்பிட்டு (பாஸ்போர்ட் போட்டோ, முகவரி, செல்போன் எண் ஆகியவற்றுடன்) “இணை இயக்குநர், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம், சென்னை மண்டலம், சைதாப்பேட்டை, சென்னை 600 015” என்ற முகவரிக்கு மார்ச் 16-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் அல்லது தபாலில் வந்தடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT