Published : 28 Feb 2020 08:29 AM
Last Updated : 28 Feb 2020 08:29 AM

வாழ்க்கை தரம் உயர நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும்: மாணவர்களுக்கு அரியலூர் மாவட்ட கல்வி அதிகாரி அறிவுரை

வாழ்க்கை தரம் உயர நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு அரியலூர் மாவட்ட கல்வி அதிகாரி பெ.அம்பிகாபதி அறிவுரை கூறினார்.

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் புத்தகம் மற்றும் மூலிகை கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் க.செல்வராசு தலைமை வகித்தார். 2 நாட்கள்(வியாழன்,வெள்ளி) நடைபெறும் இந்த கண்காட்சியை அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் பெ.அம்பிகாபதி தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது கூறியதாவது:

உடல் நலத்தைப் பேணிக்காக்க, நமது வீட்டின் அருகிலேயே கிடைக்கும்மூலிகைகளைப் பாதுகாக்க வேண்டும்.அவற்றின் நன்மைகள் குறித்து பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல, மாணவர்கள்தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள அறிஞர்கள் எழுதிய நூல்களை அதிகம் படிக்க வேண்டும். இங்கு நூற்றுக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைமாணவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இங்குள்ள மூலிகைகள் குறித்தும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்காட்சியில் அரியலூர் தமிழ்க்களம் புத்தக நிலையம் சார்பில் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள்,மாணவர்களுக்கு உதவும் கையேடுகள் மற்றும் துணிப்பைகள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பள்ளி சார்பில் தாவரவியல் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் முயற்சியில் மூலிகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மூலிகைகள் குறித்துஆசிரியர் ர.சதீஷ்குமார் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏலாக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் மீனாம்பிகா, ஒன்றியக்குழு உறுப்பினர் திரிசங்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நா.முருகானந்தம், சமூக ஆர்வலர் தமிழ்க்களம் இளவரசன் மற்றும் கிராம வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். உதவிதலைமை ஆசிரியர் கோ.செந்தில்குமார் வரவேற்றார். தமிழாசிரியர் தாமஸ்பெர்ணான்டோ நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x