Published : 28 Feb 2020 08:17 AM
Last Updated : 28 Feb 2020 08:17 AM

எஸ்எஸ்எல்சி செய்முறை தேர்வு இன்றுடன் முடிவடைகிறது

எஸ்எஸ்எல்சி அறிவியல் செய்முறைத் தேர்வு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 27-ம் தொடங்கி ஏப்ரல் 13-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் என 9 லட்சத்து 50ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். எஸ்எஸ்எல்சிமாணவர்களுக்கு அறிவியல் செய்முறைத்தேர்வுகள் பிப்ரவரி 26 முதல் 28-ம் தேதிவரை 3 நாட்களில் நடத்தி முடிக்க வேண்டும்என அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதற்கேற்ப, அந்தந்த மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்கள், எந்தெந்த பள்ளிகளில் எப்போது செய்முறைத் தேர்வுநடத்துவது என்பதை ஆலோசித்து காலஅட்டவணை தயாரித்திருந்தனர்.

தனித்தேர்வர்கள்

அதன்படி, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் செய்முறைத் தேர்வில் பங்கேற்றனர்.

பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி தனித்தேர்வர்களும் தாங்கள் பயிற்சி பெற்ற பள்ளிகளில் நடந்த செய்முறைத்தேர்வில் கலந்துகொண்டனர். செய்முறைத்தேர்வுகள் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x