Published : 28 Feb 2020 08:00 AM
Last Updated : 28 Feb 2020 08:00 AM

இன்று என்ன நாள்: தி.ஜானகிராமன் பிறந்த தினம்

தி.ஜா. என்று அழைக்கப்படும் தி.ஜானகிராமன் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் தேவகுடி என்னும் ஊரில் 1921 பிப்ரவரி 28-ம் தேதி பிறந்தார்.

நாவல், குறுநாவல், சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என பல துறைகளில் செயல்பட்டுள்ளார். 10 நாவல்கள், 5 குறுநாவல்கள், 15 சிறுகதை தொகுப்புகள் உள்ளிட்டவற்றை எழுதியுள்ளார்.

இவரது ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’, ‘உயிர்த்தேன்’ போன்ற நாவல்கள் பெரியளவில் பேசப்பட்டவை. இதில் மோகமுள் நாவல், இயக்குநர் ஞான ராஜசேரன் இயக்கத்தில் 1995-ம் ஆண்டு திரைப்படமாக வெளியானது.

இவரது படைப்புகள் பெரும்பாலும் சமூகப் பிரச்சினைகளை குறித்து பேசக் கூடியவை. ‘சக்தி வைத்தியம்’ என்ற சிறுகதைக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x