Published : 27 Feb 2020 10:47 AM
Last Updated : 27 Feb 2020 10:47 AM
மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் வெற்றி பெற்றுள்ளார்.
மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டி அகாபல்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில், ஸ்பெயின் வீரரான ரபேல் நடால், சக நாட்டு வீரரான பாப்லோ அண்ட்ஜாரை எதிர்த்து ஆடினார். கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் டோமினிக் தீமிடம் தோற்ற பிறகு சில வாரங்கள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காத நிலையில், நடால் இப்போட்டியில் ஆடினார். இதில் மிக எளிதாக 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ரபேல் நடால் வெற்றி வெற்றார்.
இப்போட்டியைப் பற்றி செய்தியாளர்களிடம் கூறிய ரபேல் நடால், “கடந்த சில நாட்களாக டென்னிஸ் போட்டிகளில் ஆடாத நிலையில், என் இயல்பை மீட்டெடுக்கவும், தன்னம்பிக்கையைப் பெறவும் இந்த ஆட்டம் எனக்கு கைகொடுத்தது. இப்போட்டியில் பாப்லோ மிகச்சிறப்பாக ஆடினார். அவரை வெல்வது கடினமானதாக இருந்தது” என்றார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT