Published : 27 Feb 2020 10:05 AM
Last Updated : 27 Feb 2020 10:05 AM

சவுதியில் குதிரை பந்தயத்துக்கு உலகிலேயே அதிக பரிசுத் தொகை

ரியாத்:

சவுதி அரேபியாவில் உலகிலேயே மிக அதிக பரிசுத் தொகை கொண்ட குதிரை பந்தயம் பிப்.29-ல் நடைபெறுகிறது.

சர்வதேச அளவில் குதிரை பந்தயம் மூலம் சவுதி அரேபிய வர்த்தகத்தை விரிவுப்படுத்த ‘சவுதி கோப்பை’ என்ற குதிரை பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிங் அப்துல் அஸிஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை காண, சுமார் 10,000 முதலீட்டாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி சுற்றில் 1,800 மீட்டர் தூரம் கொண்ட புழுதி பாதையில், 14 குதிரைகள் பங்கேற்கும். அதில் முதல் பரிசை பெறும் ஜாக்கிக்கு ரூ.71 கோடியும், 2-வது இடத்துக்கு ரூ.25 கோடியும் பரிசு வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x