Published : 27 Feb 2020 07:00 AM
Last Updated : 27 Feb 2020 07:00 AM

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி கையேடு- ஆணையர் கோ.பிரகாஷ் வெளியிட்டார்

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சியும், சென்னை ரோட்டரி கிளப் (கிழக்கு) ஆகியவை இணைந்து ‘வாழ்க்கை வழிகாட்டி’ என்ற நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பங்கேற்று, மாநகராட்சி பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் அடங்கிய, இந்தியக் கல்வி அறிவுத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட வாழ்க்கை வழிகாட்டி கையேட்டை வெளியிட்டார்.

பின்னர், மாணவ, மாணவியர்கள் 12-ம் வகுப்புக்கு பிறகு எந்த உயர் கல்வியை தேர்ந்தெடுப்பது, அதன் வாயிலாக எப்படி வாழ்க்கையை செம்மையாக அமைத்து கொள்வது என்பதை கையேடு மூலம் அறிந்துகொள்ளலாம் என எடுத்துரைக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 32 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட அறிவியல், கலைப்பிரிவு மற்றும் வணிகவியல் சார்ந்த மாணவ, மாணவியர் பங்கு பெற்றனர். இந்நிகழ்ச்சியில் கல்வி அலுவலர் பாரதிதாசன் மற்றும் உதவி கல்வி அலுவலர்கள், ரோட்டரி கிளப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x