Published : 26 Feb 2020 03:28 PM
Last Updated : 26 Feb 2020 03:28 PM

1,330 திருக்குறள்களையும் பிழையின்றி ஒப்பிக்கும் 10 வயது சிறுமி: குவியும் பாராட்டு!

1,330 திருக்குறளையும் பிழையின்றி ஒப்பிக்கும் 5-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மதுஸ்ரீ. இவரின் பெற்றோர் யூகேஜி முதல் அவருக்குத் திருக்குறளைக் கற்பித்து வந்தனர். இதில் நன்கு தேர்ச்சி பெற்ற மதுஸ்ரீ, தனது 3-ம் வகுப்பிலேயே 1,330 திருக்குறள்களையும் மனப்பாடம் செய்தார்.

இந்நிலையில் தற்போது 1,330 திருக்குறள்களையும் பிழையின்றி ஒப்பிக்கும் மதுஸ்ரீ, 500 குறள்களுக்கான விளக்கத்தையும் சொல்கிறார். இதற்கிடையே தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அனைத்துக் குறள்களையும் மதுஸ்ரீ ஒப்புவித்து அசத்தியுள்ளார்.

இதைக் கண்ட மாவட்ட ஆட்சியர், மதுஸ்ரீயை முதலமைச்சர் விருதுக்குப் பரிந்துரை செய்துள்ளார். அத்துடன் அவருக்குப் பரிசுகளையும் சான்றிதழையும் வழங்கியுள்ளார்.

திருக்குறள் மீதான சிறுமி மதுஸ்ரீயின் ஆர்வம், சக மாணவர்களையும் உத்வேகப்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x