Published : 26 Feb 2020 01:45 PM
Last Updated : 26 Feb 2020 01:45 PM

காஞ்சிபுரம் அரசுப் பள்ளி மாணவர்களுடன் சச்சின்: வைரலாகும் புகைப்படங்கள்

காஞ்சிபுரம் அரசுப் பள்ளி மாணவர்களுடன் சச்சின் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

காஞ்சிபுரம் வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் விளையாட்டுப் பூங்கா அண்மையில் அமைக்கப்பட்டது. மாணவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில், தனியார் அமைப்பு சார்பில் பூங்கா உருவாக்கப்பட்டது.

இதன் திறப்பு விழாவில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சச்சினை வரவேற்கும் விதமான அரசுப் பள்ளி மாணவர்கள், 'வெல்கம் சச்சின்' என்ற பதாகைகளை ஏந்தி, உற்சாகமாக சச்சினை வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து அங்கு படித்து வரும் மாணவர்களுடன் சச்சின் உற்சாகமாகப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் தனியார் நிறுவன ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x