Published : 26 Feb 2020 10:15 AM
Last Updated : 26 Feb 2020 10:15 AM

55 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு மார்ச் 26-ம் தேதி தேர்தல்

இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை, மக்களவை என்ற இரு அவைகள் உள்ளன. இதில் மக்களவை உறுப்பினர்கள் (எம்.பி.) மக்களால் வாக்களித்து தேர்வு செய்யப்படுகின்றனர். அதேபோல், மாநிலங்களவை உறுப்பினர்கள், பிரதிநிதித்துவம் அடிப்படையில், அதாவது மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் (எம்எல்ஏ) மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதன்படி, தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு மார்ச் 26-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 6-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்கள் 16-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை 18-ம் வரை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 26-ம் தேதி தேர்தல் நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x