Published : 26 Feb 2020 09:42 AM
Last Updated : 26 Feb 2020 09:42 AM

ராணுவத்தில் சேர மார்ச் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை

ராணுவத்தில் கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன், நர்சிங் அசிஸ்டென்ட், டெக்னிக்கல், பொதுப் பணி உள்ளிட்ட பல பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. இதற்கான முகாம், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஏப்.15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க ஆன்லைன் மூலம் மட்டுமே (www.joinindianarmy.nic.in) மார்ச் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும்.

இத்தேர்வு முறை அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x