Published : 26 Feb 2020 09:42 AM
Last Updated : 26 Feb 2020 09:42 AM

கூட்டுறவு சங்க பணியிடங்களுக்கு மார்ச் 1-ல் தேர்வு

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கு.கோவிந்தராஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப மார்ச் 1-ம் தேதி எழுத்து தேர்வு நடக்க உள்ளது.

தற்போது நிர்வாக காரணங்களால் சென்னையில் மட்டும் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி,  கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி,  கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புதுக் கல்லூரி, நந்தனம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரி, அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி ஆகிய 9 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x