Published : 26 Feb 2020 09:42 AM
Last Updated : 26 Feb 2020 09:42 AM
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கு.கோவிந்தராஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப மார்ச் 1-ம் தேதி எழுத்து தேர்வு நடக்க உள்ளது.
தற்போது நிர்வாக காரணங்களால் சென்னையில் மட்டும் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி, கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி, கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புதுக் கல்லூரி, நந்தனம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரி, அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி ஆகிய 9 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT