Published : 25 Feb 2020 10:20 AM
Last Updated : 25 Feb 2020 10:20 AM

அயர்லாந்தில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்களுக்கு அழைப்பு

லக்னோ:

அயர்லாந்தில் உயர்கல்வியை பயில விரும்பும் மாணவர்களுக்காக ஐரிஷ் கல்வித்துறை சார்பாக உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் கல்வி கண்காட்சி நேற்று நடைபெற்றது.

இதில், அயர்லாந்தில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தொழில்நிறுவனங்களின் திட்டங்கள், சலுகைகள், தங்குமிடம், சர்வதேச மாணவர் ஆதரவு, உதவித்தொகை, பண்பாடு உள்ளிட்டவை இடம் பெற்று இருந்தன. உ.பி.யை தொடர்ந்து மும்பை,பெங்களூரூ மற்றும் சென்னையிலும் இக்கண்காட்சி நடக்க உள்ளது. அயர்லாந்தில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள், உதவித்தொகை வழங்கதயாராக உள்ளதாக ஐரிஷ் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x