Published : 25 Feb 2020 10:18 AM
Last Updated : 25 Feb 2020 10:18 AM
சீனாவின் வூஹான் நகரத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கோவிட்-19 என்ற கரோனா வைரஸால் இதுவரை 2,592 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தென் கொரியா, ஈரான், பிலிபைன்ஸ் ஆகியநாடுகளிலும் பலி எண்ணிக்கை உயரத்தொடங்கி உள்ளது. இந்நிலையில், ஆண்டுதோறும் பிப்ரவரி,மார்ச் மாதம் நடைபெறும் சீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வைரஸ்தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT