Published : 25 Feb 2020 10:18 AM
Last Updated : 25 Feb 2020 10:18 AM

மணிப்பூர் பொதுத்தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் ஒருவர் கைது

மணிப்பூர் மாநில மேல்நிலைக் கல்வி வாரியம் சார்பாக 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கியது. முதல்நாள் மணிப்பூரி தேர்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்களுக்கானத் தேர்வு நடைபெற இருந்தது.

இந்நிலையில், தேர்வுக்கு முன்பாகவே அனைத்து பாடங்களுக்குமான கேள்வித்தாள்கள் வெளியானதால்,11-ம் வகுப்பில் உள்ள அனைத்து பிரிவுகளுக்குமான பொதுத் தேர்வு 20-ம்தேதி ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே கல்வி வாரியம் சார்பாக காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது. மேலும், கேள்வித்தாள்கள் வெளியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட கமிட்டியை வாரியம் நியமித்துள்ளது.

இந்நிலையில், தனியார் மேல்நிலைப் பள்ளியின் நிர்வாக அதிகாரியான சுந்தர்சந்த் என்பவரை சைபர் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x