Published : 21 Feb 2020 10:34 AM
Last Updated : 21 Feb 2020 10:34 AM
அருணாச்சலப் பிரதேசம் தனி மாநிலமாக தோற்றுவிக்கப்பட்டதன்34-வது ஆண்டை கொண்டாடும் விதமாக அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நேற்று பங்கேற்றார்.
அப்போது, ‘அருணாச்சல பிரதேசம்தொழில் மற்றும் முதலீட்டு கொள்கை2020’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைஅவர் அறிமுகம் செய்தார். மேலும், எல்லை சாலைகள் அமைப்பால் போடப்பட்டுள்ள ஜோராம் கோலோரியாங் சாலையை திறந்து வைத்தார். அம்மாநிலத்தை தெற்கு திபெத்தின் ஒருபகுதி என்று தொடர்ந்து கூறிவரும் சீனா, அங்கு இந்திய தலைவர்கள் வருவதை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்ஜெங் ஷுவாங் கூறுகையில், “இந்திய தலைவர்கள் இங்கு வருவது பெய்ஜிங்கின் பிராந்திய இறையாண்மையை மீறிய செயலாகும். இது தொடர்புடைய இருதரப்பு ஒப்பந்தத்தை இந்தியா மீறி உள்ளது” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT