Published : 21 Feb 2020 10:18 AM
Last Updated : 21 Feb 2020 10:18 AM
உத்தரப் பிரதேசத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடந்து வருகிறது. மவு நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் முதல்வர் பிரவீன் மால் என்பவர் தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகையில், “தேர்வு அறையில் நீங்கள் உங்களுக்குள் பேசிக்கொண்டு விடை எழுதலாம். அரசுப் பள்ளி தேர்வு மையங்களில் இருக் கும் ஆசிரியர்கள் அனைவரும் எனது நண்பர்களே. விடைத்தாளில் ரூ. 100 வைத்தால், ஆசிரியர்கள் கண்களை மூடிக் கொண்டு மதிப்பெண் வழங்குவார்கள்
இதை அங்கிருந்த மாணவர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மக்கள் குறைதீர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT