Published : 21 Feb 2020 09:47 AM
Last Updated : 21 Feb 2020 09:47 AM

பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு தொடங்கியது

கோவை ஆர்எஸ் புரம் கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் கணினி அறிவியல் செய்முறைத் தேர்வில் பங்கேற்ற பிளஸ் 1 மாணவ, மாணவிகள். படம்: ஜெ.மனோகரன்.

கோவை

பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 1 மாணவர்களுக்கு கோவையில் செய்முறைத் தேர்வு தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரைநடைபெறுகிறது. இத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு கோவையில் புதன்கிழமை தொடங்கியது. கோவை மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில்படிக்கும் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, "பொதுத்தேர்வு எழுதும் மேலும், பிளஸ்1 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 235 மையங்களில் இரண்டு கட்டங்களாக இத்தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வைப் போலவேதேர்வு கண்காணிப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் என பல்வேறு பிரிவில் 1,500 முதுகலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

21-ம் தேதி எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் கண்காணிப்பு, வினாத்தாள் அனுப்புவதை ஒளிப்பதிவு செய்தல் ஆகிய பணிகளும் நடக்கின்றன" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x