Published : 19 Feb 2020 03:55 PM
Last Updated : 19 Feb 2020 03:55 PM
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் படிக்க மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்புகளில் மாணவா் சேர்க்கைக்கான கால அவகாசம் பிப்ரவரி 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள மாணவா்கள் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் உள் ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை மையம் மூலம் விண்ணப்பம் பெறலாம். இந்த மையம் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் செயல்படும்.
அதுமட்டுமின்றி, இணையம் மூலமாகவும், பல்கலைக்கழக கற்றல் உதவி மையம் மூலமாகவும் மாணவர் சேர்க்கை பெறலாம். மேலும் விவரங்களுக்கு, www.unom.ac.in என்ற இணையதளத்தைப் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT