Published : 19 Feb 2020 08:18 AM
Last Updated : 19 Feb 2020 08:18 AM

கரோனா பாதிப்பால் புது கரன்சி வெளியிட சீன அரசு திட்டம்?

கோப்புப்படம்

பெய்ஜிங்

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்புக்கு இதுவரை 1,900 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 72 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பாதிப்படைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது தொற்று ஏற்பட்டு இதுவரை 6 மருத்துவ பணியாளர்கள் தங்களின் உயிரை தியாகம் செய்துள்ளனர். தற்போது 1,716 மருத்துவ பணியாளர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, வூஹான் நகரின் உள்ள வூசங்க் அரசு மருத்துவமனை இயக்குநர் லியு ஜிமிங்க்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. நோயின் பாதிப்பு அதிகமானதால், அவர் நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில், சீனாவின் கரன்சியான யுவான் மூலம் கரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக அரசு கருதியது. இதனால், தற்போது புழக்கத்தில் உள்ள யுவானை திரும்ப பெற்று, புதிய நோட்டுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, ஹுபெய் மாகாணத்தின் வங்கிகளில் உள்ள யுவான் நோட்டுகள் அனைத்தும் குறிப்பிட்ட வெப்பநிலையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x