Published : 19 Feb 2020 07:57 AM
Last Updated : 19 Feb 2020 07:57 AM
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 17,502 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கரூர்,மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூரில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மார்ச் 27-ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கலாம்என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT