Published : 18 Feb 2020 12:18 PM
Last Updated : 18 Feb 2020 12:18 PM

ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டு முறை: அருணாச்சல் ஆளுநர் யோசனை

கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்களுக்கு மதிப்பீடு வழங்குவது குறித்து அருணாச்சலப் பிரதேச ஆளுநர் யோசனை தெரிவித்துள்ளார்.

உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி தொடர்பான கருத்தரங்கத்தை அருணாச்சலப் பிரதேச ஆளுநர் பிரிகேடியர் மிஸ்ரா தொடங்கி வைத்தார். அதன் தொடக்க விழாவில் பேசிய அவர், ''மாநிலத்தின் கல்வித் தரத்தை உயர்த்தவேண்டிய தேவை இருக்கிறது. இதற்காக ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம்.

பெற்றோர்கள் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே தொழில் முனையும் திறமையை வளர்க்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களும் 'நாடுதான் முதலில்' என்ற மனநிலையோடு பணியாற்ற வேண்டும்.

நாட்டைக் கட்டமைக்கும் விதத்தில் தங்களின் பணியை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். தொடக்க, உயர்நிலை மற்றும் கல்லூரிக் கல்வியை வளர்ச்சி அடிப்படையிலும் பரந்ததாகவும் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

கல்வி என்பது தனிப்பட்ட ஆளுமைத் திறனை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். பாதுகாப்பான வேலையை மட்டும் உறுதி செய்வதாக இருக்கக் கூடாது'' என்று தெரிவித்தார்.

விழாவில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுகளை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x