Published : 17 Feb 2020 08:12 AM
Last Updated : 17 Feb 2020 08:12 AM

திரிபுராவில் கல்வியை மேம்படுத்த 21 புதிய திட்டங்கள்: முதல்வர் பிப்லப் குமார்

அகர்தலா: திரிபுராவில் கோவாய் மாவட்டம் கல்யாண்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டி டங்களை முதல்வர் பிப்லப் குமார் திறந்து வைத்து பேசியதாவது:

திரிபுரா மாநிலத்தில் கல்வியை மேம்படுத்துவதற்காக 23 மாதங்களில் 21 திட்டங்கள் அடுத்தடுத்து தொடங்கப்பட்டுள்ளன. புதிய தேசிய கல்வி கொள்கையை நாட்டிலேயே முதல் முறையாக திரிபுரா அரசுதான் அமல்படுத்தியது.

அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி வழிமுறைகள், கற்பித்தல் குறித்து தொடர் கண்காணிப்பு, ஆசிரியர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக 50 பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

இவ்வாறு முதல்வர் பிப்லப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x