Published : 15 Feb 2020 12:10 PM
Last Updated : 15 Feb 2020 12:10 PM

நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகள் இன்று தொடங்கின

10 மற்றும் 12-ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் நாடு முழுவதும் இன்று (பிப்.15) தொடங்கின.

இதில் 10-ம் வகுப்புத் தேர்வை சுமார் 18 லட்சம் பேர் எழுதுகின்றனர். 12-ம் வகுப்பில் தேர்வை எழுத சுமார் 12 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். திறன் சார்ந்த பாடங்கள் மீதான தேர்வு முதலில் நடக்கிறது. பிப்ரவரி 20-ம் தேதி வரை திறன்சார் தேர்வுகள் நடக்கின்றன. அதற்குப் பிறகே வழக்கமான மொழித் தேர்வுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களுக்காக தேர்வுகள் நடைபெற உள்ளன.

10-ம் வகுப்புக்கு மார்ச் 20 ஆம் தேதி வரையும், 12-ம் வகுப்புக்கு மார்ச் 30-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன.

இதற்கிடையே வினாத் தாள்கள் கசிவதாக இணையத்தில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2019-ம் ஆண்டு பொதுத் தேர்வின் போது யூடியூப் மற்றும் சில சமூக வலைதளங்களில் சிபிஎஸ்இ வினாத்தாள்கள் வெளியானதாக வதந்தி பரவியது. அதை சிபிஎஸ்இ மறுத்து, அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x