Published : 12 Feb 2020 10:21 AM
Last Updated : 12 Feb 2020 10:21 AM

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானை வென்றது இந்திய அணி

ஆசிய குழுபாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கஜகஸ்தானை வென்றது.

ஆசிய குழு பாட்மிண்டன் சாம்பியன்ஷிப், மணிலா நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியஅணி முதல் போட்டியில் கஜகஸ்தனை எதிர்கொண்டது. முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வீரரான கிடாம்பி காந்த், 21-10,21-7 என்ற நேர் செட்களில் கஜகஸ்தானின் டிமிட்ரி பனரினை மிக எளிதாகவென்றார்.

மற்றொரு ஆட்டத்தில் லக்‌ஷயா சென், 21-13, 21-0 என்ற நேர் செட்களில் அர்தர் நியாசோவை வீழ்த்தினார். இப்போட்டி 21 நிமிடங்களிலேயே முடிவடைந்தது. 3-வது போட்டியில் இந்தியாவின் சுபாங்கர் டே, 21-11, 21-5 என்ற புள்ளிக்கணக்கில் கைட்முராட் குல்மாட்டோவை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து நடந்த இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத் - சிராக் ஷெட்டி ஜோடி தோல்வியடைந்தது. இந்த ஜோடி, கஜகஸ்தானின் நியாசோவ் - பனரின் ஜோடியிடம் 21-18, 16-21, 19-21 என்ற புள்ளிக்கணக்கில் போராடித் தோற்றது. மற்றொரு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் - துருவ் கபிலா ஜோடி 21-14, 21-8 என்ர நேர்செட்களில் வெற்றி பெற்று இந்தியாவின் முன்னிலையை 4-1 என உயர்த்தியது. நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொள்கிறது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x