Published : 10 Feb 2020 08:20 AM
Last Updated : 10 Feb 2020 08:20 AM

சாலை பாதுகாப்பு வார விழா: விநாடி-வினா போட்டி தூத்துக்குடி பிஎம்சி பள்ளி சாதனை

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடத்தப்பட்ட விநாடி-வினா போட்டிகளில் தூத்துக்குடி பிஎம்சி பள்ளி மெட்ரிக் பள்ளி முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டக் காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், தூத்துக்குடி பி.எம்.சி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அபரிசன், ஜெமில்டன் அணி முதலிடத்தைப் பிடித்தது. அதே பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் ஜெயவர்ஷினி, ஸ்ரீமதி அணி 2-வது இடத்தையும், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பென்னட் ஜெபர்சன், ஐசக்பால் அணி 3-வது இடத்தையும் பிடித்தன.

அந்த அணியினருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பரிசுகள் வழங்கினார். முதல் பரிசாகரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x