Published : 07 Feb 2020 10:07 AM
Last Updated : 07 Feb 2020 10:07 AM

மன அழுத்தமின்றி பொதுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

மன அழுத்தமின்றி பொதுத் தேர்வைஎதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து கிருஷ்ணகிரியில் அரசு மகளிர்மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

வாழும் கலை அமைப்பு மற்றும்பெருமாள் மணிமேகலை தொழில்நுட்ப கல்விக்குழு சார்பில், எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவிகளுக்கு மன அழுத்தமின்றி பொதுத் தேர்வை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்தபயிற்சி பயிற்சி முகாம் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை வகித்தார். வாழும் கலை அமைப்பின் ஆசிரியர் மற்றும் இணை பேராசிரியர் சண்முகம், கோவை வாழும் கலை ஆசிரியர்கள் தாமோதரன், கிருஷ்ணவேணி, போடி செந்தில்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

வாழும் கலை அமைப்பின் ஆசிரியர் தாமோதரன் பேசும்போது, ‘‘உடல் ஆரோக்கியம் சீராக இருக்க நாம் நான்கு விஷயங்களை கவனிக்க வேண்டும். அவை மகிழ்ச்சி, ஓய்வு, தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி ஆகியவை ஆகும். உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து மாணவிகளுக்கு உடற்பயிற்சியும், மன ஆரோக்கியத்துக்கு தியானம், மூச்சுப் பயிற்சி மற்றும் சிறு விளையாட்டுப் பயிற்சியும் அளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், இயந்திரவியல் துறைத் தலைவர் முத்துக்குமார், உதவி தலைமை ஆசிரியர்கள் பசவராஜ், பெருமாள் உட்பட 600 மாணவிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x