Published : 04 Feb 2020 05:03 PM
Last Updated : 04 Feb 2020 05:03 PM
விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் பண்டைய மகளிர் அணிகலன் கண்காட்சி இன்று நடைபெற்றது.
"கீழடி முதல் கி.பி. வரை" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கண்காட்சியை வே.வ.வன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் நாகஜோதி தொடங்கிவைத்தார்.
தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சுசிலா மற்றும் பண்டைகால பொருள்கள் சேகரிப்பாளர் சிவகாசியைச் சேர்ந்த ராஜராஜன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
இக்கண்காட்சியில் கீழடி தொல்பொருள் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு வெளிக்கொணரப்பட்ட சங்ககால மக்கள் பயன்படுத்திய அணிகலன் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும் சங்ககால பெண்கள் உச்சி முதல் பாதம் வரை அணிந்திருந்த நெத்திச்சூடி, கம்மல், மெட்டி, சங்கிலி, வளையல், கொலுசு, ஒட்டியாணம் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதோடு, அணிகலன்கள் அணிவதால் ஏற்படும் பயன்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கண்காட்சியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். பழங்கால பொருட்கள் குறித்து ராஜராஜன் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT