Published : 01 Feb 2020 10:43 AM
Last Updated : 01 Feb 2020 10:43 AM
தனியார் கல்லூரி பேராசிரியர்கள் பெற்றுள்ள பிஎச்.டி. பட்டம் தொடர்பான ஆவணங்களை மார்ச் 16-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அண்ணா பல்கலை. உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் சில பேராசிரியர்கள் போலி பிஎச்.டி. சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதவிர, கணிசமானவர்கள் தவறான ஆதார் எண், பான் எண் ஆகியவற்றை அளித்தும் பேராசிரியர், விரிவுரையாளர் பணியில் சேர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
எனவே, தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளர், பேராசிரியர் தேர்வின்போது பட்டதாரிகளின் சான்றிதழ் விவரங்களை முழுவதுமாக பரிசோதித்த பிறகே பணியில் சேர்க்க வேண்டும்.
தங்கள் கல்லூரி பேராசிரியர்கள் பெற்றுள்ள பிஎச்.டி. பட்டம் உண்மையானதுதான் என்பதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடம் இருந்து பெற்று, அண்ணா பல்கலை.யில் மார்ச் 16-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT