Published : 01 Feb 2020 10:19 AM
Last Updated : 01 Feb 2020 10:19 AM

பிப்.10 முதல் குரூப்-2 கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

பிப்.10-ம் தேதி முதல் குரூப்-2 கலந்தாய்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 23 துறைகளில் காலியாக இருந்த 1,338 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான குரூப்-2 தேர்வு இரண்டு நிலைத் தேர்வுகளாக நடைபெற்றது. முதல் நிலைத் தேர்வு கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி நடைபெற்றது. 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.

இதில் 14,797 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி நடந்து முடிந்தது. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விவரம் கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி வெளியிடப்பட்டது.

தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் 2,667 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

அவர்களுக்கான கலந்தாய்வு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி 15-ம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்கான அழைப்பாணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x