Published : 30 Jan 2020 10:02 AM
Last Updated : 30 Jan 2020 10:02 AM
தென் ஆப்பிரிக்காவில் உள்ளபோட்செஸ்ட்ரூம் நகரில், சர்வதேசதடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறியும் போட்டியில் இந்தியவீரரான நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.
ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றிருந்த நீரஜ் சோப்ரா, காயம் காரணமாக சில மாதங்களாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, 87.86 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்தார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார்.
முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஒருவர் தகுதி பெற வேண்டுமானால் 85 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நீரஜ் சோப்ரா, “இப்போட்டியில் முதல் 3 முயற்சிகளிலும் 80 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிந்தேன். இதில் சிறப்பாக செயல்பட்டு, ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT