Published : 30 Jan 2020 08:30 AM
Last Updated : 30 Jan 2020 08:30 AM

இந்தியாவுக்கு ஆப்பிரிக்க சிறுத்தைகளை கொண்டுவர உச்ச நீதிமன்றம் அனுமதி

நம் நாட்டில் அரிதாக காணப்படும் இந்திய சிறுத்தைகள் கிட்டதட்ட அழிந்துவிட்டன. இதனால் நமீபியாவில் இருந்து ஆப்பிரிக்க சிறுத்தைகளை கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (என்டிசிஏ) உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தலைமையிலான அமர்வுநேற்று முன்தினம் விசாரித்தது. அப்போது, ‘இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு ஆப்பிரிக்க சிறுத்தைகளுக்கான வாழ்விடத்தை சோதனையின் அடிப்படையில் அனுமதிக்கலாம்’ என்டிசிஏ சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சோதனை அடிப்படையில் ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டுவர உச்சநீதிமன்றம் அனுமதிவழங்கி உத்தரவிட்டது. மேலும், இதுதொடர்பாக என்டிசிஏ முடிவெடுக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இது சிறந்த வாழ்விடத்தை உருவாக்கும் பணியில் என்டிசிஏ-வுக்கு வழிகாட்டுதலாக இருக்கும். இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி 4 மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x