Published : 30 Jan 2020 07:44 AM
Last Updated : 30 Jan 2020 07:44 AM
ஜம்முவில் உள்ள அரசுப் பள்ளிகளில் சத்தான காய்கறிகளை உருவாக்க தேவையான ஊட்டச்சத்து தோட்டங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.
ஜம்மு யூனியன் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள விஜய்ப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமையல் போட்டி நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில மதிய உணவு திட்டத்தின் இயக்குநர் அருண் மன்ஹாஸ் கூறுகையில், “ஜம்முவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதன்மூலம் கிடைக்கும் சத்தான காய்கறிகளை கொண்டு, மதிய உணவுத் திட்டம் மூலம் மாணவர்களின் உடல் நலத்தை பேணும் தேவையான மதிய உணவு பள்ளிகளிலேயே தயாரித்து வழங்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடுப்பூசி அட்டை
இடாநகர்
அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க தடுப்பூசி அட்டை கட்டாயம் என்று அருணாச்சல பிரதேச மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில உள்ளது சுபன்சிரி மாவட்டம். இந்த மாவட்ட சுகாதாரக் கூட்டமைப்பு, பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது தடுப்பூசி அட்டையை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இதுகுறித்து கூடுதல் துணை இயக்குநர் நென்டிங் சதுங் கூறும்போது, ‘‘அரசுப் பள்ளி மாணவர்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அவர்களுக்கு தடுப்பூசிகள் போடுவதை அதிகரிக்க வேண்டும். எனவே, அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் போதே தடுப்பூசி அட்டையை வழங்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT