Published : 29 Jan 2020 09:31 AM
Last Updated : 29 Jan 2020 09:31 AM

செய்திகள் சில வரிகளில்: நாட்டின் சிறந்த சுங்க அதிகாரிகளுக்கு சுங்க விருது

சர்வதேச சுங்க தினம் ஆண்டுதோறும் ஜனவரி 26-ல் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சுங்கத் துறை சார்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது சுங்கத்துறையில் சிறப்பாக செயல்பட்ட 17 அதிகாரிகளுக்கு உலக சுங்க அமைப்பின் (wco) விருதினை அமைச்சர் அனுராக் வழங்கினார்.

லடாக்கில் 3.6 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம்

ஜம்மு

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசமான லடாக்கில் கடந்த 12-ம் தேதி நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.3 அளவில் பதிவானது. இந்நிலையில், லடாக் பகுதியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக ஜம்மு வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் சோனம் லோட்டஸ் கூறுகையில், “ லடாக் பகுதியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோளில் 3.6 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்றார். ஒரே மாதத்தில் அடுத்ததடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x