Published : 28 Jan 2020 03:23 PM
Last Updated : 28 Jan 2020 03:23 PM
மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரமும் காப்புரிமையும் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியும் தமிழ்நாடு அறிவியல் கழகத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரமும் காப்புரிமையும் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் கண்டுபிடிப்பாளர்கள் என்று அவர்களுக்கே அறிமுகப்படுத்த உள்ளோம். இதன் மூலம் அவர்களது ஆராய்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வோம்.
இதையெல்லாம் தாண்டி, நமக்குத் தேவையான கண்டுபிடிப்புகள் நமது நாட்டிலேயே இருக்கின்றன என்பதை அனைவரும் உணர வேண்டும். அதை இன்னும் மேம்படுத்த, குறிப்பாக சமூகத்துக்குப் பயன்படும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதில் கிட்டத்தட்ட 17 திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன.
பள்ளி மாணவர்களில் இருந்து கல்லூரி மாணவர்கள் வரை அடுத்தகட்ட ஆராய்ச்சியாளர்கள் என்று பெயர் பெறும் வகையில் செயல்திட்டங்கள் அடுத்தடுத்த நிலைகளுக்கு எடுத்துச் செல்லப்படும்''.
இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT