Published : 28 Jan 2020 08:26 AM
Last Updated : 28 Jan 2020 08:26 AM

ஜூலை 5-ல் ‘சிடெட்' தகுதித்தேர்வு: பிப்.24 வரை விண்ணப்பிக்கலாம்

கேந்திர வித்யாலயா உள்ளிட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்வதற்கு ‘சிடெட்' எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள் முதல்தாள் தேர்வையும், பட்டதாரி ஆசிரியர்கள் 2-ம் தாள் தேர்வையும் எழுதவேண்டும். இத்தேர்வெழுத விரும்பும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் https://ctet.nic.in/ என்ற இணையதளம் மூலமாக பிப்ரவரி 24 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x