Published : 27 Jan 2020 06:18 PM
Last Updated : 27 Jan 2020 06:18 PM
தீவிரவாத தாக்குதல், நச்கலைட்டுகள் தாக்குதல் ஆகியவற்றில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் வரும் 10-ம் வகுப்பு மற்றும் 12ம்வகுப்பு தேர்வு எழுத வரும்போது விதிமுறைகளில் சலுகை தரப்படும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ தேர்வுக்கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
புல்வாமா தாக்குதலுக்குப்பின், தேர்வு விதிமுறைகளைத் தளர்த்தும் முடிவை ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் துணை ராணுவப்படைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது தீவிரவாத தாக்குதல், நக்லைட்டுகள் தாக்குதலில் பணியின்போது ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர் உயிரிழந்திருந்தால் அவர்களின் குழந்தைகள் இந்த ஆண்டில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வு எழுதும் போது அவர்களுக்குத் தேர்வு விதிமுறைகளில் சலுகை காட்டப்படும்.
அதன்படி 12-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்புத் தேர்வு எழுதும் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் தேர்வு மையத்தை அதே நகரில் வேறு இடத்துக்கு மாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.அல்லது வேறு நகரில் உள்ள தேர்வு மையத்துக்கு மாற்றித் தரக்கோரினாலும் அதற்கு அவர்களுக்கு அனுமதி உண்டு.
அதேபோல செய்முறைத் தேர்வுகளைச் செய்யும் வாய்ப்புகளை ராணுவ வீரர்களின் பிள்ளைகள் தவறவிட்டிருந்தால், ஏப்ரல் 2-ம்தேதிக்குள்ளாக அவர்களுக்கு ஏற்ற நாளில் ஒருநாள் பள்ளிக்கு வந்து செய்முறைத் தேர்வு செய்து கொள்ளலாம். ஏதாவது ஒரு தேர்வை பிறகு எழுதிக்கொள்கிறேன் என்று கூறினாலும் அதற்கும் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால், அதை உரிய பள்ளி நிர்வாகத்திடம் மாணவர்கள் தெரிவிக்கலாம். அவர்கள் சிபிஎஸ்இ வாரியத்திடம் முறையாக அறிவித்து அனுமதி பெறுவார்கள்" இவ்வாறு பரத்வாஜ் தெரிவித்தார்
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 30-ம் தேதி முடிகிறது. 10-ம் வகுப்புக்குப் பிப்ரவரி 15-ம்தேதி தொடங்கி மார்ச் 20-ம்தேதி முடிகிறது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT