Published : 27 Jan 2020 05:04 PM
Last Updated : 27 Jan 2020 05:04 PM

குறு வனம்: உலக சாதனையை நோக்கி பள்ளி மாணவர்கள்

குறு வனம் (MICRO FOREST) என்ற கருத்தாக்கத்தில் சென்னை பள்ளி மாணவர்கள் உலக சாதனையை நிகழ்த்த முயற்சி மேற்கொண்டனர்.

தொழில்நுட்ப வசதிகள் அடுத்தடுத்த உச்சத்தைத் தொட்டு வரும் காலகட்டம் இது. இதனால் நம் அன்றாட வேலைகளில் ரோபோக்களின் பயன்பாடு அதிகமாகி வருகிறது. அந்த ரோபாக்களைக் கொண்டு பசுமைக்கான தொடக்கத்தைப் பள்ளி மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ளனர்.

சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். தனியார் அமைப்பின் உதவியுடன் 326 மாணவர்கள் உலக சாதனைக்கு முயற்சி மேற்கொண்டனர். 7 முதல் 13 வயது மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

செய்தது என்ன?

முன்னதாக குறிப்பிட்ட இடத்தைச் சுற்றி, சீரான இடைவெளியில் மரக்கன்றுகளை நடுவதற்கான குழி வெட்டப்பட்டிருந்தது. ரோவர்களின் உதவியுடன் சிறுவர்கள் மரக்கன்றுகளை மண்ணில் நட்டனர். ரிமோட்டின் உதவியுடன் ரோவர்கள் இயக்கப்பட்டு, சரியாக குழிக்குள் மரக்கன்றுகள் இறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கன்றுகளுக்குத் தண்ணீரும் விடப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நவீன அறிவியலையும் பசுமையையும் ஒன்றிணைக்கும் முயற்சி சிறுவர்கள் மத்தியில் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x