Published : 27 Jan 2020 10:43 AM
Last Updated : 27 Jan 2020 10:43 AM

மேற்கு வங்கத்தில் 100 பள்ளிகளை மூடுவதற்கு முடிவு

மாணவர் சேர்க்கை குறைவாக இருந்ததால், மேற்கு வங்கத்தின் பல்வேறு நகரங்களில் இருந்த 100 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ 2018-19-ம் கல்வியாண்டில், நகரங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமலும், குறைவாகவும் இருந்தன. அவ்வாறு குறைவாக மாணவர் சேர்க்கை நடைபெற்ற100 பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.

குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கை ரயில்வே ஊழியர்களுக்கு பாராட்டு

புதுடெல்லி

வடக்கு ரயில்வே, ரயில்வே குழந்தைகள் இந்தியா ஆகியவை சார்பில் ரயில் நிலையங்களிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயலாற்றிய ரயில்வே ஊழியர்களை பாராட்டு விதமாக டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை விழா ஒன்று நடைபெற்றது.
ஆறு பிரிவுகளில் தலா ஐந்து பேர் என 30 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பாக செயல்பட்ட அதிகாரி களுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x