Published : 27 Jan 2020 09:06 AM
Last Updated : 27 Jan 2020 09:06 AM
கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில், ஒரே ஒன்றியத்துக்குள் பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு நங்கவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வருகை புரிந்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ளது பொய்யாமணி ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில் 180-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
ஒரே ஒன்றியத்தக்குள் பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் நங்கவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 20 பேர், தங்களது ஆசிரியைகள் ரேவதி, சந்திராதேவி ஆகியோர் தலைமையில் பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கடந்த 21-ம் தேதி வருகை தந்தனர்.
அவர்களை அப்பள்ளியின் தலைமை ஆசிரியைமுத்துலட்சுமி வரவேற்றார். பின்னர் இருபள்ளிகளின் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொண்டனர்.
பள்ளியில் உள்ளஸ்மார்ட் கிளாஸ், நூலகம் உள்ளிட்டவற்றை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். பேரிடர் மேலாண்மை குறித்து அப்பள்ளி ஆசிரியர்கள் பூபதி, உமாமகேஸ்வரி, கவிதா ஆகியோர் விளக்கினர்.பொய்யாமணி பள்ளி மாணவர்கள் ரோல்பிளே செய்து காட்டினர்.
பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஜன.24-ம் தேதி நங்கவரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுடன் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT