Published : 25 Jan 2020 07:45 AM
Last Updated : 25 Jan 2020 07:45 AM
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு புகாரை தொடர்ந்து, சமீபத்தில் நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்விலும் முறைகேடுகள் அரங் கேறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு வெளியான நிலையில், அதில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டு, அதில் தேர்வான 99 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணை யத்தால் நடத்தப்பட்ட உதவி ஆய்வாளருக்கான (எஸ்.ஐ.) எழுத்து தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. முன்னதாக, கடந்த12-ம் தேதி பொதுப் பிரிவினருக்கும், 13-ம் தேதி காவல்துறையில் ஏற்கெனவே பணியாற்றுபவர்களுக்கும் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
969 காலி பணியிடங்களுக்கான இத்தேர்வில், பொதுப் பிரிவில் 1.42 லட்சம் பேரும், காவல்துறை இடங்களுக்கு 17, 561 பேரும் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், வேலூர் அடுத்த மூஞ்சூர்பட்டுவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்கள்,வேலூரில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு முறைகேடுகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர, கடந்த 13-ம் தேதி மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காவலர்கள்பங்கேற்ற தேர்வில், கண்காணிப்பாளர்கள் சிலர் தங்கள் செல்போன்கள் மூலம் சரியான விடையை தேர்வு செய்து அளித்த தாகவும் புகார்கள் எழுந்துள்ளன. டிஎன்பிஎஸ்சி போன்று இந்த தேர்வு தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT