Published : 24 Jan 2020 08:02 AM
Last Updated : 24 Jan 2020 08:02 AM
தொடக்கப் பள்ளி மாணவர்களின் கையெழுத்தை மேம்படுத்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று மேற்குவங்கத்தின் கல்வித்துறை அமைச்சர் கடந்த சில வாரங்களுக்கு முன்பாகஅறிவித்து இருந்தார். இதுதொடர்பாக மேற்கு வங்க பள்ளிக் கல்வி பாடத்திட்ட உருவாக்கக் குழுவின் தலைவர் அபிக் மஜும்தர் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் உள்ள மாணவர்களின் கையெழுத்து மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் உயர்நிலை கல்விக்கு செல்லும் போது மாணவர்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். தேர்வின்போது சரியாக மதிப்பெண் கிடைக்காமல் போகிறது. அதேபோல், கையெழுத்து என்பது மாணவர்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும்.
எனவே, கையெழுத்து விஷயங்களை தொடக்கப் பள்ளியில் இருந்தே சரிசெய்ய தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, அரசு தொடக்கப் பள்ளியில் இருந்தே கையெழுத்தை மேம்படுத்த, மாணவர்களுடன் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இணையவுள்ளனர். கையெழுத்து பயிற்சிக்காக பாடத்திட்டத்தில் தனிப்பிரிவு சேர்க்கப்படும்.
மேலும் கையெழுத்து பிரிவில் உலக அளவில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுடன் மாணவர்களுக்கு தேவையான எழுத்துப் பயிற்சி அளிக்கப்படும். தற்போது, மாணவர்களுக்கு 1-ம் வகுப்பில் மூன்று புத்தகங்களும், 3-ம் வகுப்பில் ஏழு புத்தகங்களும் 4,5-ம் வகுப்புகளில் எட்டு புத்தகங்களும் உள்ளன. இவ்வாறு அபிக் மஜும்தர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT