Published : 23 Jan 2020 04:52 PM
Last Updated : 23 Jan 2020 04:52 PM
உ.பி. மதரஸா ஒன்றில் இந்துக்கள் உருது கற்பதும் முஸ்லிம்கள் சமஸ்கிருதம் படிப்பதும் ஒருசேர நிகழ்ந்து வருகிறது.
உத்தரப் பிரதேசம், கோண்டா மாவட்டத்தின் வாஸிர்கஞ்ச் பகுதியில் உள்ள குல்ஷான் - இ-பாக்தாத் என்னும் மதரஸாவில் இரண்டு மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. இங்கும் படிக்கும் 230 மாணவர்களில் 30 பேர் இந்துக்கள் ஆவர். இங்கு படிக்கும் முஸ்லிம் மாணவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் சமஸ்கிருதத்தைக் கற்று வருகின்றனர்.
மத வேறுபாடில்லாமல் இந்து மற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் இங்கு கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மதரஸா முதல்வர் காரி முகமது ரஷித் கூறும்போது, ''நம்முடைய குழந்தைகளுக்குத் தலைசிறந்த கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். முஸ்லிம் மாணவர்களுக்கு சமஸ்கிருதம், இந்தி ஆகியவை கூடுதலாகக் கற்பிக்கப்படுகின்றன. அதேபோல முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பேரில் உருது, அரபி உள்ளிட்ட மொழிகளைச் சொல்லித் தருகிறோம்.
அதேபோல இந்து, முஸ்லிம் மாணவர்களுக்கு பெர்ஷியன், இந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன.
ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் மதச்சார்பற்ற கல்வி முறை மிகவும் அவசியம்'' என்று காரி முகமது ரஷித் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT