Published : 23 Jan 2020 11:33 AM
Last Updated : 23 Jan 2020 11:33 AM

ஜார்கண்ட் மாநிலத்தில் நேதாஜி பிறந்த நாளில் மீண்டும் விடுமுறை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான ஜனவரி 23-ம் தேதி பொது விடுமுறை என்று ஜார்கண்ட் மாநில அரசு மீண்டும் அறிவித்துள்ளது.

இதற்கு முந்தைய 5 ஆண்டுகள் மாநில விடுமுறைப் பட்டியலில் இருந்து இந்த நாள் விலக்கப்பட்டிருந்தது.

ஜார்கண்டில் ‘நேதாஜி ஜெயந்தி’ 2014 வரை விடுமுறைப் பட்டியலில் இருந்தது. பின் 2015 முதல் 2019 வரையிலான இடைப்பட்ட ஆண்டுகளில் மாநில விடுமுறைப் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டிருந்தது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியிட்ட அறிக்கையில், “ஜார்கண்ட் நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் பணி இடமாக இருந்தது. இந்திய விடுதலை போராட்டத்தில் இவரது பங்களிப்பை மறக்கவே முடியாது. நாம் அனைவரும் இவருடைய வாழ்க்கையில் இருந்து உத்வேகம் பெற்றுக் கொள்ளவேண்டும். மேலும் இளைஞர்கள் நேதாஜியின் வாழ்க்கையை பின்பற்றி நாட்டுக்கும் மாநிலத்துக்கும் சேவை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x