Last Updated : 22 Jan, 2020 12:21 PM

 

Published : 22 Jan 2020 12:21 PM
Last Updated : 22 Jan 2020 12:21 PM

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை: புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் 

புதுச்சேரியில் 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு பழைய நிலையிலேயே தொடரும் என்று புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுச்சேரியில் 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தற்போது எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.

காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகளின்போது வேறு பள்ளி ஆசிரியர்களை கண்காணிப்பாளராக நியமித்து வருகிறோம். மேலும் வேறு பள்ளிகளில் விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதனுடைய விளைவுகள் என்ன?, மாணவர்களின் கல்வித் தரம், ஆசிரியர்களின் செயல் திறன் எப்படி உள்ளது என்பதைப் பொறுத்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவை, பின்பற்றத் திட்டமிட்டுள்ளோம். அதுவரை பழைய நிலையே தொடரும்.''

இவ்வாறு அமைச்சர் கமலக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x