Published : 21 Jan 2020 10:23 AM
Last Updated : 21 Jan 2020 10:23 AM

பராகுவே சிறையில் இருந்து 76 கைதிகள் தப்பியோட்டம்

பராகுவே நாட்டில் போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட நூற்றுக்கும் அதிகமானோர் பெட்ரோ ஜுவான் கபல்லெரோ சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிறையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 76 கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து பராகுவே போலீஸ் செய்தித் தொடர்பாளர் எலெனா ஆண்ட்ராடா கூறியதாவது: சிறையில் இருந்து 40 பிரேசில் கைதிகளும், 36 பராகுவே கைதிகளும் இணைந்து கழிவறையில் சுமார் 25 மீட்டர் அளவுக்கு சுரங்கம் அமைத்து தப்பிச் சென்றுள்ளனர்.

கைதிகள் தப்பிச் செல்ல 5 வேன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு உடந்தையாக இருந்த சிறை காப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x